சிறுகதை

மத்தியப் பொது நூலகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி பிற்பகல் 2 முதல் 4 மணி வரை, ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் கலந்துரையாடல் நடைபெற்றது. அதை எழுத்தாளர் சிவானந்தம் வழிநடத்தினார்.
ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மத்திய பொது நூலகத்தில் ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
“பார்த்து போங்க!” மனைவியின் அன்பான வேண்டுகோளை நினைத்தபடியே சாலையைக் கடந்தேன். இப்படித்தான் சில நாள்களுக்குமுன் சிராங்கூன் சாலையில் இருக்கும் கடையில் வீட்டுக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடையைப் போட்டேன்.
கடலை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆயிஷா. அவளது மனப்புழுக்கத்தைப் போலவே கடற்கரையும் ஒரே வெக்கையாக இருந்தது. மனிதர்களுக்கு பல அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை என்னும் ஆசான், அண்மைக் காலமாக அவளுக்குத் தனிமைப் பாடத்தை நன்றாக உணர்த்தி வருகிறது. போதாததற்கு முதுமை வேறு அவளைப் பார்த்து புன்னகையை உதிர்த்து ‘ஹலோ’ என்றது. இத்தனை ஆண்டுகளாக என்னைத் தவிக்கவிட்ட என் ராஜகுமாரன் இன்றைக்காவது வந்து என்னைத் தழுவிக்கொள்வானா? என அவளின் மனம் கடலில் எழும் அலைகளைப் போலவே ஆர்ப்பரித்தது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் பிப்ரவரி 18ஆம் தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு தேசிய நூலகத்தில் சிறுகதைப் பயிலரங்கு நடத்தப்பட்டது.